ஜாக்கிரதை: முகநூலில்(Facebook) பதிவு மற்றும் மீள்குடியேற்ற மோசடி

வியாழக்கிழமை / 16 மார்ச் 2023

Facebook இல், RM50 முதல் RM100 வரை பணத்திற்கு ஈடாக UNHCR அட்டைகள், பரிசீலனை கடிதங்கள் (UC) மற்றும் மீள்குடியேற்ற விண்ணப்பக் கடிதங்களை வழங்குவதாகக் கூறும் தனிநபர்களை பற்றின புகார்களை UNHCR பெற்றுள்ளது. பல Facebook பதிவுகள் மூலம், சில நபர்கள், UNHCR ஆவணங்களைப் பெற ஆர்வமுள்ள எவரையும் தங்கள் தனிப்பட்ட விவரங்களை WhatsApp மற்றும் Viber எண்ணுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறார்கள். பினாங்கு, பட்டர்வொர்த் மற்றும் கோலாலம்பூரின் கம்போங் சேரஸ் பாருவில் இருந்து செயல்படுவதாக அந்த நபர்கள் கூறுகின்றனர்.

இது ஒரு மோசடி. இந்த நபர்கள் UNHCR உடன் இணைக்கப்படவில்லை மற்றும் UNHCR ஆவணங்களை வழங்குவதற்கான அதிகாரம் அல்லது திறன் ஆகியவற்றைக் கொண்டிருக்கவில்லை. UNHCR சேவைகள் அனைத்தும் இலவசம். பதிவு, அகதி நிலை நிர்ணயம் (RSD), மீள்குடியேற்றம் அல்லது வேறு எந்த நோக்கத்திற்காகவும் உங்கள் வழக்கைச் செயல்படுத்த UNHCR ஊழியர்களுக்கோ அல்லது எந்தவொரு தனிநபருக்கோ நீங்கள் பணம் செலுத்த முடியாது

UNHCR உங்களிடம் பணம் கேட்காது. பணத்திற்கு ஈடாக, UNHCR ஆவணங்களைப் பெற அல்லது UNHCR செயல்முறைகளை அணுக உங்களுக்கு உதவ முடியும் எனக் கூறும் நபர்களிடம் கவனமாக இருங்கள். உங்கள் தனிப்பட்ட தகவல்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

பணத்திற்கு ஈடாக UNHCR சேவைகளை (UNHCR ஆவணங்கள், பதிவு, RSD, மீள்குடியேற்றம் போன்றவை) வழங்க முடியும் எனக் கூறும் நபர்களை நீங்கள் கண்டால், இதை இங்கே புகாரளிக்கவும்:

உங்கள் UNHCR அட்டை ரத்து செய்யப்படாது, மேலும் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளை UNHCR க்கு புகாரளித்தால் உங்கள் வழக்கு தாமதமாகவோ அல்லது மூடப்படவோ மாட்டாது.

UNHCR இன் செயல்முறைகள் மற்றும் உதவி பற்றிய கூடுதல் தகவலுக்கு, அகதி மலேசியா இணையதளத்தைப் பார்க்கவும்.



Share